Are you over 18 and want to see adult content?
More Annotations
![A complete backup of https://musicplasma.com](https://www.archivebay.com/archive6/images/c47998e9-f2c6-4aff-b1f5-2521c58f6300.png)
A complete backup of https://musicplasma.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://feddelegrand.com](https://www.archivebay.com/archive6/images/69033ca7-f659-44d2-b6b8-8af1824cf8b3.png)
A complete backup of https://feddelegrand.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://pizzahut.be](https://www.archivebay.com/archive6/images/eea42456-6833-4efd-b2e5-3e2063493b00.png)
A complete backup of https://pizzahut.be
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://eyeflare.com](https://www.archivebay.com/archive6/images/35673b38-efb4-4f41-8004-b4d83a3b2780.png)
A complete backup of https://eyeflare.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://illustrativemathematics.org](https://www.archivebay.com/archive6/images/17e33c54-354f-4281-bfe7-0d471dc038d8.png)
A complete backup of https://illustrativemathematics.org
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://gedprisanquerime.tk](https://www.archivebay.com/archive6/images/4c88953a-4868-466e-be40-9e2c7315e65a.png)
A complete backup of https://gedprisanquerime.tk
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://waautos.com.au](https://www.archivebay.com/archive6/images/da5064b2-5c49-4e9a-b522-ed9d1016e051.png)
A complete backup of https://waautos.com.au
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://mcdartshop.nl](https://www.archivebay.com/archive6/images/5a159175-b10d-42dc-a060-1b090aadaa95.png)
A complete backup of https://mcdartshop.nl
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://sarashi.com](https://www.archivebay.com/archive6/images/03f977e6-2356-415c-8a14-ec6a3385098b.png)
A complete backup of https://sarashi.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://baxters.com](https://www.archivebay.com/archive6/images/0c4b731c-0c83-476e-b0ae-4326c5d80025.png)
A complete backup of https://baxters.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://philanselmo.com](https://www.archivebay.com/archive6/images/d8bb924c-8775-4af4-b324-042094878995.png)
A complete backup of https://philanselmo.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of https://viox-solutions.de](https://www.archivebay.com/archive6/images/d642a114-cc04-4169-b368-89fa75eb39a6.png)
A complete backup of https://viox-solutions.de
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
![A complete backup of wikiphp1.blogspot.com](https://www.archivebay.com/archive/7e3bad29-11e6-4fa4-b940-76411c6326e9.png)
A complete backup of wikiphp1.blogspot.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of multiterapias.com.br](https://www.archivebay.com/archive/16bb27f1-cb7a-4eff-acd7-defcd98ccca5.png)
A complete backup of multiterapias.com.br
Are you over 18 and want to see adult content?
![A complete backup of progresspublishing.wordpress.com](https://www.archivebay.com/archive/ccda58c5-9fd5-44f1-9b24-4c26a9d2dd26.png)
A complete backup of progresspublishing.wordpress.com
Are you over 18 and want to see adult content?
![A complete backup of sandyrunhuntco.com](https://www.archivebay.com/archive/4cf3967c-4a1c-4d3f-808a-6f088232133b.png)
A complete backup of sandyrunhuntco.com
Are you over 18 and want to see adult content?
Text
*
PAGES
* Home
*
CATEGORIES
* “விடுதலை” * அ.அமுதன் * அ.குமரேசன்* அசாக்
* அசுரன் * அதி அசுரன் * அதிஅசுரன் * அழகிய பெரியவன் * ஆதவன் தீட்சண்யா* ஆர்.கே
* இரா.சிந்தன் * இராவணன் * இரும்புத்திரை * இளவேனில்… * இளைஞர் முழக்கம் * உ.ரா.வரதராஜன் * உமாவும் கவிதையும் * உறையுர்க்காரன் * உறையூர்காரன் * என்.கணேசன் * கட்டுரைகள் * கண்மணி * கபிலன் * கல்வெட்டு * கவிஞர் காசி ஆனந்தன் * கவிதை … * காசி ஆனந்தன் * கீற்று * கீழைக்காற்று * குட்டிரேவதி * குர்ரம் பர்வேஸ் * கேடயம் * கையேடு * கொளத்தூர் தா.செ. மணி * கோவை இராமகிருட்டிணன் * ச.தமிழ் செல்வன் * சங்கமித்திரன் * சசியின் டைரி * சர்வதேசியவாதிகள்* சாரு
* சிவப்பு அறிவால் வெல்… * சீமான் … * சுதா சுந்தர்ராமன் * சுந்தரராஜன் * சுப. வீரபாண்டியன் * சூரியன் * செங்கொடி * சோதிடம் * ஜாவேத் ஆனந்த் * தந்தை பெரியார் * தந்தைபெரியார் * தந்தைப்பெரியார் * தமிழர் கண்ணோட்டம் * தமிழ் அரங்கம் * தமிழ் குருவி * தலித் முரசு * தீசுமாசு டி சில்வா * துரை. சண்முகம் * தொல்.திருமாவளவன் * ந.முத்து * நடைவண்டி * நா.ஜெயராமன் * நாத்திகம் இராமசாமி * பகலவன் குழுமம் * பாடல்கள் * பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் * பாவலர் இரா.இரவி * பிரபஞ்சன் * புதுவிசை * புத்தகங்கள் * புனிதபாண்டியன் * பூங்குழலி* பூபதி
* பெ.மணியரசன் * பெரியார் முழக்கம் * பெரியார்தாசன் * பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் * பொன்னுசாமி* ம.க.இ.க
* மகிழ்நன்.பா * மதிபாலா * மயிலாடன் * மருதையன் * மருதையன் * மரைக்காயர் * மானமிகு * மானுட விடுதலை… * மின்சாரம் * மீனா மயில் * முகிலன் * முருக சிவகுமார் * மேலாண்மை பொன்னுச்சாமி * யுவகிருஷ்ணா * ரவி ஆதித்யா * ரா. அதியமான் * ராவணன் * லிவிங் ஸ்மைல் * வால் பையன் * விடாது கறுப்பு* வினவு!
* வில்லவன் * வே மதிமாறன் * வே.மதிமாறன் புத்தகங்கள் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? July 6, 2013 — தொகுப்புகள் ...i
5 Votes
உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாளமாய் மாற்றிக்கொள்ள பலர் தொடர் முயற்சியர்சிகளை மேற்கொண்டாலும் அவர்களது மேதமை அதையும் தாண்டி சமூகம் முழுமைக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது. அத்தகைய ஆளுமைகளில் அம்பேத்கர் ஒரு மகத்தான இடத்தை பிடித்தவராவார். அவர் சமூகத்தில் பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் 18 மணி நேரம் பயின்று 1916ல் எம்.ஏ பட்டம் பெற்றவர். நியூயார்க் நகரில் 2000 புத்த்கங்களை வாங்கியவர். லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவலர் வந்து கூறுகிறவரை படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இப்படியாக அவரது பரிமாணங்களை சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் அவர் இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக தள்ளிவைக்கப்பட்ட பெருந்திரள் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த மாமேதையாவார். அந்த மக்கத்தான மனிதனின் கல்விச் சிந்தனைகள் கல்வியை நேசிக்கும் அனைவரும் உள்வாங்க வேண்டிய கருத்து பெட்டகங்களாகும். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மறைந்த அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தை கண்டுணர்ந்தார். ஆரம்ப கல்வியில் அவர் வயதையத்த குழந்தைகள் கையில் புத்த்கங்களையும், உணவு பைகளையும் சுமந்து வந்த போது அவர் கூடுதலக சாக்கு பையையும் சுமந்து வந்தார். இன்னும் பிற அவலங்கள் அவர் வாழ்க்கையில் கடுமையான உறுதியை கொண்டு வந்தது. விடாப்பிடியுடன் கற்றலின் உச்சிக்கு சென்றார். தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அது கிடைத்திட தனது சொந்த முயற்சியால் அவர்களுக்கான கல்வி நிலையங்களை துவக்கினார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மும்பை தாமோதர் ஹாலில் நடந்த கூட்டத்தில் “பஹிஷ்க்ரித் ஹித்காரினி சபா” என்ற அமைப்பை உருவாகினார். விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஆகியவைகளை தனது நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் ஷோலாப்பூருக்கு அருகில் இலவச விடுதி ஒன்று கட்டப்பட்டது. பைகுல்லா என்ற இடத்தில் நூலகம் ஒன்றையும், மாணவர்களுக்காக “வித்யா விலாஸ்” என்ற மாதப்பத்திரிக்கையும் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அம்பேத்கர் “ஒடுக்கப்பட்டோர் கல்வி கழகம்” என்ற அமைப்பை துவங்கினார். இதன் சார்பில் ஐந்து விடுதிகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 1945 ஆம் ஆண்டு “பீப்பிள்ஸ் எஜுகேஷ்ன் சொஸைட்டி” என்ற அமைப்பை உருவாக்கினார். தானே முன் நின்று பதினைந்து லட்சம் செலவில் (அரசின் உதவி 6 லட்சம்) ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த அமைப்பு இப்போது ஆல்போல் தழைத்துள்ளது. இப்போது ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளும், பொறியியல் கல்லூரி. சட்டக் கல்லூரி உட்பட பதினான்கு கல்லூரிகளையும், மூன்று விடுதிகளும் ஒரு தொழிற்பயிற்ச்சிக் கல்லூரியும் நடத்தப்படுகிறது. சைமன் கமிஷன் இந்தியா வந்த போது, 1813 முதல் பிரிடிஷ் அரசாங்கம் இந்தியாவில் கடைபிடித்த கல்வி கொள்கையை அவர் ஆராய்ந்து கொடுத்த மனு மிகவும் புகழ்பெற்ற மனுவாகும். இந்திய கல்வியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் புள்ளி விபரங்களை அவர் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி அந்த அறிக்கையை தயாரித்து இருந்தார். அதே போல அவர் 1920 களில் பம்பாய் மாகாண் சட்ட மேலவை விவாதங்களில் கலந்துக்கொண்டு பேசிய பேச்சுக்கள் அவரது கல்வி மீதான அக்கறையை காட்டும். வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் அளிக்காது. அது சாதி இந்துக்களுக்கே பயன்படவில்லை. ஆக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கற்றபதுதான் பயன்தரும். ஆனால் இதை கற்பதற்கான கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என அவர் வாதாடினார். கல்வி அரசின் கையில் இருக்கவேண்டும் என அவர் விடாபிடியாக இருந்த காரணம் அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமேனும் கல்வி கிடைக்கும் என உறுதியா நம்பினார். அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆனால் இந்திய சாதி அமைப்பை கலைக்க அல்லது சீர்குலைக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு சிறந்த உதாரணத்தை அவர் சைமன் கமிஷனுக்கு கொடுத்த் அறிக்கையிலிருந்து பார்க்கலாம்.. “இப்போது நாம் நமது கவனத்தை ஓர் உண்மையின்பால் செலுத்த வேண்டும்; இதுவரை நாம் பெரிதும் அலட்சியப்படுத்தி வந்த உண்மை அது; இதனை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்; அந்த அசைக்க, மறுக்க முடியாத உண்மை இதுதான்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிது உகந்ததான, பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற கல்வி அறிவை மிகப்பெரும் திரளான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது மிக மிக அவசியம்; எத்தகைய கல்வியையும் தங்களது முயற்சியினால் கிடைக்கப் பெற இயலாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் இருந்து வருகிறார்கள்” என 1854 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி இந்திய மக்களுக்கு கல்வியை கொடுக்க பிரிடிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது உண்மையா என அவர் கேட்டார். அப்படி இந்த கவலை உண்மையெனில் இது யாருகான கவலை? சாதி இந்துக்களுக்கும் பிறருக்குமா? அப்படியெனில் தலித்துக்கள் உங்களுக்கு சுமையா? என மறைமுகமாக கேட்டார். இவைகளை ஆதாரங்களுடன் அடுக்கினார்… 1881- 82 கல்வியாண்டை அய்வு செய்து அவர் கணக்கிட்டார். அப்போது தொடக்க கல்வி பயின்றவரகள் மொத்தம் 3,15,635 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.87 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 2,862 பேர் மட்டுமே. (பிராமணர்கள் 20.17 சதம்.) அப்போது நடுநிலைப் பளிகளில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 11,254 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.14 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 17 பேர் மட்டுமே. (பிரமணர்கள் 30.70 சதம்.) அப்போது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 4959 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் ஒருவர்கூட இல்லை. (பிரமணர்கள் 40.79 சதம்.) அப்போது கல்லூரியில் பயின்றவரக்ள் மொத்தம் 480 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள், 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எவரும் இல்லை. (பிரமணர்கள் 50.05 சதம்.) ஆக பிரிடிஷ்காரர்கள் இவைகளை கவனிக்க வேண்டுமென கூறினார். அவரது கொள்கை ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவதும் என இருந்த காரணத்தினால் தனது வாழ்வியல் அனுபவ அடிப்படையில் சாதி இந்துக்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்போதும் அடக்கியே வைத்திருப்பார்கள் என்ற உண்மையை கண்டுணர்ந்தார். இன்றும் அதுதான் நடக்கிறது. அறிவு ஜீவிகளாக தங்களை புறிந்துக் கொள்கிற ஐ.ஐ.டி “டுபாக்கூர்கள்” முதல் மதிப்பெண் பெறும் தலித் மாணவனை கோட்டா அடிப்படையில் தள்ளிவைத்து, அவர்கள் இடத்தை பரித்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் அன்றைய கல்வியை, சமூக நிலைகளை ஆய்வு செய்த அம்பேத்கர் போல இன்றைய கல்வியையும், சமூகத்தையும் நாம் ஆய்வு செய்யவேண்டுமா இல்லையா? அவரது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை ஏன் ஒரு துவக்கமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?! ஆகவே கனவான்களே! இனி அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள். Posted in கட்டுரைகள்.
Tags: மானுட விடுதலை....
1 Comment »
வன்னிய குல ஷத்திரியர்கள் July 6, 2013 — தொகுப்புகள் ...i
4 Votes
வன்னியர்களை மணமுடிக்கும் தலித்துக்களின் காதலை நாடகக்காதல் என்று வெறி கொண்டு எதிர்க்கும் பாமக, இதற்காக தமிழகமெங்கும் ஆதிக்க சாதி வெறியர்களை அணிதிரட்டி வருவது நமக்கு தெரியும். இதற்காகவே தருமபுரி தலித் இளைஞரான இளவரசனிடம் இருந்து வன்னியப் பெண்ணான திவ்யாவை மிரட்டி பிரித்து வைத்து அழகு பார்த்தவர்கள் இந்த வன்னிய குல ஷத்திரியர்கள் ! நிர்ப்பந்தத்தில் பேசும் திவ்யாவின் அவலத்தை வைத்தே வன்னிய மானம் மீட்கப்பட்டதாக துள்ளிக் குதிப்பவர்கள் இந்த சாதி வெறியர்கள். ஆனாலும் வரலாறு அவர்களின் துள்ளலை எத்தனை நாட்களுக்குத்தான் அனுமதிக்கும்? சொந்த சாதியில் பெற்றோர், உற்றோர் உறவினர் பார்த்து திருமணம் செய்து கொண்டு நாடகக் காதலை எதிர்க்கும் பாமகவினர் தமது சொந்த வாழ்க்கையில் எத்தகைய ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்? இதோ கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் கதையை படியுங்கள்! திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பாட்டாளி மக்கள் கட்சி. ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான ஆறுமுகம். அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய இவர் பா.ம.க. நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு கைதானவர். மே மாதம் காதலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு வெயிலுக்கு அஞ்சி திருச்சி சிறையில் இருந்த போது மேற்படி ஆறுமுகமும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருக்கிறார். மே 22-ம் தேதி நடந்த அவரது மகள் திருமணத்துக்குக் கூட சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் அவர் இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறது. பின்னர் மே 27-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்திருக்கிறார். இப்படி பாமக கொள்கையிலும், போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட மாபெரும் வன்னிய குல ஷத்திரிய வீரர்தான் இந்த ஆறுமுகம். கள்ளக் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் எதிரான பா.ம.க.வின் உண்மையான களப் போராளியான ஆறுமுகம் மே மாதம் 30-ம் தேதி கொத்தாம்பாடி வழியாகச் செல்லும் வசிஷ்ட நதிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே வளையல்கள் உடைந்து கிடந்ததால் ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள் மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். ஒரு பாமக பிரமுகரும் களப் போராளியுமான ஆறுமுகம் உடைந்த வளையல்கள் சூழ ஏன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்க வேண்டும்? கொள்கைக்காக கொல்லப்பட்டிருந்தால் வெளிப்படையாக இன்னார்தான் எதிரிகள் என்று தெரிந்திருக்கும். கொள்கை இடத்தில் மர்மமும் வளையலும் இருந்தால் என்னபொருள்?
பா.ம.க.வின் சமூக நீதி கோட்பாட்டின்படி முறையாக திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகத்திற்கு 25, 21 வயதான இரண்டு மகன்களும் 22 வயதான மகளும் உள்ளனர். அதாவது பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் அய்யா ஆறுமுகம் இருந்திருக்கிறார் என்பது முக்கியமானது. வன்னிய மக்களின் மானத்திற்கும், பொறுப்பிற்கும் சொந்தக்காரர்களான பாமக கட்சியின் பிரமுகரே அதுவும் மர்மமான முறையில்கொலை
செய்யப்பட்டிருக்கிறார் என்பதால் ‘அம்மாவின்’ ஆத்தூர் போலீசு கொலையை விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். தமிழகத்திலேயே புகழ் பெற்ற மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பாமகவின் மானத்தையும், மர்மத்தையும் கண்டு பிடிக்க வேண்டிய கடமையை நாய் அர்ஜூன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. விசாரணையின் போது கல்பகனூரைச் சேர்ந்த செல்வி என்பவருடன் ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. உடனே ஒரு பாமக பிரமுகர் கள்ள உறவு வைத்திருப்பதா என்று பாமக சொந்தங்கள் பொங்கி எழுமென்று யாரும் எதிர்பார்க்கவேண்டாம். கள்ள உறவு இல்லையென்றால் ஷத்திரிய குலத்தின் ஆண்மைக்கு பெருமையில்லை. எனினும் போலீசார் மனதை இரும்பாக்கிக் கொண்டு அந்த செல்வியிடம் விசாரித்தார்கள். ஆரம்பத்தில் அவர்களிடம் செல்வியும் அழுது அரற்றியவாறு கூறியது என்னவென்றால் வசிஷ்ட நதிக்கரையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த செல்வியின், “மாஜி’ கள்ளக் காதலன் வனராஜா எட்டி உதைத்தபோது, ஆறுமுகத்தின் ஆண் குறியில் அடிபட்டு அவர் இறந்துவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம். இப்படி புராணச் சிறப்புள்ள இந்த மர்மக் கொலையின் மூலத்தை ஆத்தூர் போலீசு தொடர்ந்து தேடியபோது முதலில் வனராஜாவை குறிவைத்தார்கள். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாகவே வனராஜா காஷ்மீர் போகும் லாரியில் ஓட்டுனராக சென்று விட்டதும், அவர் இப்போது குஜராத்தில் இருப்பதும் தெரிய வந்தது. வனராஜா, வசிஷ்ட நதி, காஷ்மீர், குஜராத் எல்லாம் சேர்ந்து பார்த்தால் இதில் மகாபாரதமே இருக்குமோ என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. வனராஜாவுக்கு இந்தக் கொலையில் தொடர்பில்லை என்பதை போலீசார் பல சுற்று விசாரணையில் கண்டுபிடித்தனர். அதற்கு முன்னரே போலீசிடம் கதை சொன்ன செல்வி பின்னர் தலைமறைவாக இருந்து விட்டு வேறு வழியின்றி ஜூன் 6-ம் தேதி கல்பகனூர் வி.ஏ.ஓ. அத்தியப்பன் முன்பு ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். பிறகு போலீசில் செல்வி அம்மையார் கொடுத்த வாக்குமூலத்தை படியுங்கள்: “என் சொந்த ஊர் சேலம் அருகே உள்ள அனுப்பூர். தாய்மாமன் ரத்தினவேலை நான் திருமணம் செய்தேன். அதன்பின், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தினவேலின் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், நான் கல்பகனூரில் உள்ள எனது தாய் பழனியம்மாளுடன் வந்து வசித்து வந்தேன். அப்போது, பா.ம.க., கட்சியில் உள்ள பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் ஆறுமுகம் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29-ம் தேதி, கொடுத்த பணத்தை அவர் கேட்டதால், பணத்தை திருப்பி கொடுக்ககூடாது என்று முடிவு செய்த நான் இரவு 9.30 மணியளவில் அவரை “வா நாம் உல்லாசமாக இருக்கலாம்” என்று வசிஷ்ட நதிக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை நசுக்கிப் பிடித்து கசக்கி கொலை செய்தேன், பின்னர் நான் வீட்டுக்கு போய்விட்டேன்.” இதுதான் செல்வி அளித்திருக்கும் வாக்குமூலம்! செல்வி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலே எழுதிய அனைத்தும் எமது சொந்தச் சரக்கு அல்ல. அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த செய்திகளைத்தான் தொகுத்து எழுதியிருக்கிறோம். பொதுவில் கள்ளக்காதல் கொலை என்றால் ஊடகங்கள் அதை மலிவான ரசனையை தூண்டும் விதத்தில் எழுதும். அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இங்கே ஒரு முக்கியமான பாமக பிரமுகர் கள்ளக் காதலியால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காதல், நாடகக் காதல், வன்னிய குல ஷத்திரிய வீரம், அக்னிக்கு பிறந்தவர்கள், ஒழுக்கம், என்று ஏகப்பட்ட விசயங்களைப் பேசும் அய்யாவின் பாமக நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இந்த ஆறுமுகம் ஒரு சான்று இல்லையா? பெண்டாளுவதையே ஆண்மையின் வீரம் என்று கொண்டாடுவது எல்லா ஆதிக்க சாதியிடத்திலும் உண்டு. அதிலும் இந்த ‘ஷத்திரிய’ வகை சாதிகளில் இது இன்னும் அதிகம். இந்த ஆணாதிக்க திமிர்தான் சாதிப் பெருமை என்று தலித்துக்களின் காதலை வெறுப்புணர்வுடன் ஒழிக்க நினைக்கிறது. ஊருக்கே நல்லொழுக்க போதனை செய்து, இளைஞர்களின் காதலை அடித்தும், மிரட்டியும், பிரித்து வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் யோக்கியதைக்கு ஆறுமுகம் ஒரு உதாரணம். எனினும் அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல்போகாது.
தினமலர் ஜூன் 04,2013 ஆத்தூர்: ஆத்தூர் அருகே, வசிஷ்ட நதிக் கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பா.ம.க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 45. அவர், கடந்த, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.இதில், கல்பகனூர் புதூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதையடுத்து, செல்வியை, போலீஸார் கைது செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில், செல்வி, ஆறுமுகம் ஆகிய இருவரும், வசிஷ்ட நதிக்கரையில், உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, செல்வியின், “மாஜி’கள்ளக் காதலன் வனராஜா, இருவரும் தனிமையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரமடைந்த வனராஜா, ஆறுமுகத்தை கடுமையாக தாக்கி கொலை செய்தார். வனராஜாவை, ஆத்தூர் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஜூன் 07,2013 ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலி, பா.ம.க., பிரமுகரின் ஆண் உறுப்பை கசக்கி, “கொடூரமாக’ கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஆத்தூர் அருகே, கல்பகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர், பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம், 47. அவர், மே, 30ம் தேதி, கொத்தாம்பாடி வழியாக செல்லும் வசிஷ்ட நதிக்கரையில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடல் அருகே, வளையல்கள் உடைந்து கிடந்ததால், ஆறுமுகத்தின் மனைவி காசியம்மாள், மர்ம நபர்கள் கொலை செய்ததாக, ஆத்தூர் போலீஸில் புகார் செய்தார். ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வந்தனர். இதில், கல்பகனூரை சேர்ந்த செல்வி என்பவருடன், ஆறுமுகத்துக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், அவரை தேடி வந்தனர். நேற்று, கணேசன் மனைவி செல்வி, 34, என்பவர், கல்பகனூர் வி.ஏ.ஓ., அத்தியப்பன் முன்னிலையில், ஆஜராகி ஆறுமுகத்தை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, செல்வி அளித்த வாக்குமூல விபரம்: சேலம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூரை சேர்ந்த தாய்மாமன் ரத்தினவேலை, திருமணம் செய்தேன். அதன்பின், ரத்தினவேல் சகோதரர் கணேசனை திருமணம் செய்தேன் அதில், பிரபு, விஜய் என, இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் கணேசன், வேறு பெண்ணை திருமணம் செய்ததால், கல்பகனூரில் உள்ள தனது தாய் பழனியம்மாளுடன், வசித்து வந்தேன். அப்போது, பா.ம.க., பிரமுகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு முன், ஆறுமுகம், எனக்கு, 20 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். கடந்த, 29ம் தேதி, இரவு, 9.30 மணியளவில், கொடுத்த பணத்தை கேட்டதால், உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆறுமுகத்தின் ஆண் உறுப்பை கசக்கி கொலை செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதையடுத்து, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பத், செல்வியை கைது செய்து, சேலம் மகளிர் சிறையில் அடைத்தார். Posted in கட்டுரைகள்.
Leave a Comment »
தமிழகத்தை அச்சுறுத்தும் சாதிக் கூட்டணி May 27, 2013 — தொகுப்புகள் ...i
5 Votes
சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை ஓரளவுக்குப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இன்று விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஆணாதிக்கவாதிகளின் கொடுமை களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ‘ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ என்று இதே தமிழ் நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களால் சாதி ஆதிக்கவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் பாதிக்கப்படுவதாகத் தற்பொழுது புலம்பத் தொடங்கியுள்ளனர். ஒரு சட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது என இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து பார்க்காமல், அந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பவர்களின் நிலையில் இருந்து அச்சட்டத்தை மதிப்பிடுவது அறிவுடைஆகுமா?
தமிழினப் பாதுகாவலராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மருத்துவர் ராமதாஸ், இன்று தன் சாதிக்காரர்களை மட்டும் திரட்டி, சேரித்தமிழர் களுக்கு எதிராகப் ‘பேருரை’ ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையை மக்கள் தொலைக்காட்சி (தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் தொலைக்காட்சி என்று இதற்கொரு பெருமை உண்டு. அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரர்கள் தூய சாதியவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்பது செந்தமிழுக்குப் பெருமை சேர்க்குமா என்று தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது) நேரடியாக ஒளிபரப்புச் செய்ததைப் பார்த்தீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்: ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன் என்று மார் தட்டிய கிருஷ்ணனின் பகவத் கீதையை ‘முட்டாளின் உளறல்’ என்று செவிட்டில் அறைந்தாற் போல் புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அந்த நான்கு வர்ணங்கள்தான் பிற்காலத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளாகப் பரிணாமம் பெற்றன. அந்தச் சாதிகளை ஆதரித்து, நியாயப்படுத்தி, பாதுகாத்து, அதன் மூலம் பிற சாதியினரை இழிவுபடுத்தி, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் எவனுக்கும் அம்பேத்கர் சொன்ன கருத்தையே பதிலாக வழிமொழிகிறேன் எனப் பதிலுரைத்தேன். பகுத்தறிவுக்கு எதிரான சாதிய மனம் எத்தகைய அறிவியல் ஆதாரங்களையும், சமூக உண்மைகளையும் ஏற்காது. எனவே, இத்தகைய உளறல்களைச் சாதியை முற்றாக மறுக்கும் எவரும் விவாதித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. ஆனால், இத்தகைய சமூகக் குற்றத்தை ஒரு மாநாட்டைத் திரட்டிச் செய்யும் சமூகக் குற்றவாளிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதைவிடப் பெருங்குற்றம். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், முன்வைக்கப்பட்ட வன்கருத்தியல்களால்தான் தருமபுரியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன. அவர்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டன. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி அதே இடத்தில் மீண்டும் தலித் மக்களுக்கெதிராக வன்மத்தை உமிழும் உரைகளைப் பேசவும் ஒளிபரப்பவும் தாராளமாக அனுமதி அளித்த நீதிமன்றத்தாலும் அரசாலும்தான் மாநாடு தொடங்கும் முன்பே, மரக்காணம் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகள் ஏவப்பட்டிருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான கருத்து வன்மங்களைத் தலித் மக்கள் மீது சுமத்தும் முன்னணித் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தால், மரக்காண வன்கொடுமைகள் அரங்கேறி இருக்காது. வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டிய அரசு அலட்சியமாக நடந்துகொள்கிறது. இச்சட்டத்தை நடை முறைப்படுத்தாததுதான் குற்றமே தவிர, சட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அண்மையில் ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது என்பதற்காக, அதைத் திரையிடவிடாமல் தடுத்து நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடிய அ.தி.மு.க. அரசு, சாதியவாதிகளை மட்டும் தலித் மக்களுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதன் நோக்கம் என்ன? வன்னியர் சங்கமாக உருவெடுத்து, பின்னர் எந்தவொரு சாதியாலும் தனியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட காரணத்தால், ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற முகமூடி அணிந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரிய சிந்தனையின் அடிப்படையில், கன்´ராம் அவர்கள் கால் நூற்றாண்டுகாலம் கடுமையாக உழைத்து, ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கினார். சாதிய சமூகத்தில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இழிநிலைக்குத் தள்ளப் பட்ட பெரும்பான்மை மக்களை (பகுஜன் சமாஜ்) பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர் மறையாக அணிதிரட்டி, தொண்ணூறுகளில் ஆட்சி அதிகாரத்தை அவர் கைப்பற்றினார். பின்னர், அது மாயாவதி தலைமையில் சீர் குலைந்து போய்விட்டது என்பது தனிக்கதை.
கன்´ராமின் தத்துவத்தை நகல் எடுத்து, ஆட்சி அதிகாரக் கனவில் திளைத்த ராமதாஸ், சில ‘தலித் ஒற்றுமை’ நாடகங்களை அரங்கேற்றினார். இதைத் தலித் மக்கள் தொடர்ந்து சந்தேகித்தும் எதிர்த்தும் வந்தனர். அதற்கான காரணத்தை இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். எவ்விதச் சமூக இணக்கத் தையும் உருவாக்காமல் அரசியல் தலைவர்கள் மட்டுமே ஒன்றிணைவதால் சமூக நல்லிணக் கத்தைப் பேணிவிட முடியாது. எந்தவொரு சாதியும் தன்னைச் சாதி நீக்கம் செய்து கொள்ளாமல், ஒன்றிணையவே முடியாது. அப்படி ஒன்றிணைந்தாலும், அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சாதி ஆதிக்கம் பதுங்கி நிற்கும்; அதிகாரக் கனவு கைகூடிய பிறகு, அது தன் கொடூர முகத்தை வெளிப்படுத்தும். ஆகவேதான் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர்மறையான அடையாளங்களுடன் அரசியலில் மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டுத் தளத்திலும் அணிசேரும் போதுதான் அது நிலையான சமூக இணக்கத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும். ஆனால் ராமதாஸ் தற்பொழுது உருவாக்கி யிருப்பது அப்பட்டமான சாதிவெறிக்கூட்டணி. இது, காலங் காலமாக மநுதர்ம அடிப்படையில் ஊரையும் சேரியையும் நிரந்தரமாகப் பிரிக்கும் கூட்டணி. தன் சுயசாதி முன்னேற்றத்திற்கு (அதுகூட இன்று சுருங்கி, தன் குடும்ப முன்னேற்றமாகி விட்டது. அதற்கு வன்னியர் இரையாவதை அவர்களே உணரத் தொடங்கி விட்டனர்). சேரித் தமிழர்களை எதிரிகளாக அடையாளம் காட்டு கின்றனர். அதாவது தன் சாதியின் சூத்திரப் பிறவி இழிவு அடையா ளத்திற்குக் காரணமான சாதி அமைப்பையும், அந்த அமைப்பை இன்று வரை நியாயப்படுத்தும் பார்ப்பனர்களையும், பிற இடை நிலைச் சாதி வெறியர்களையும் பங்குதாரர்களாகக் கொண்ட கூட்டணி இது. அந்த வகையில், சாதி அமைப்பைத் தகர்ப்பதையே தங்களின் பண்பாடாகக் கொண்டுள்ள தலித்துகளுக்கு எதிரான கூட்டணி இது. அதனால்தான் அதற்குத் ‘தலித் அல்லாதோர்’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. “இந்தியாவின் (2500 ஆண்டுகால) ஒட்டுமொத்த வரலாறே பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போராட்டமே” என்றார் அம்பேத்கர். இதைத்தான் ஆரியர் திராவிடர் போராட்டம் என்று பெரியார் அடையாளப்படுத்தினார். பார்ப்பனியம் என்பது ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கும் கொள்கை. பவுத்தம் சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கை. படிநிலைப்படுத்தப்பட்ட சாதிய சமூக அமைப்பையும் அதற்கு ஆதாரமான (இந்து) மதத்தையும் எதிர்த்து, ஏற்க மறுத்த தொல்குடி மக்கள் சமத்துவமான பவுத்த பகுத்தறிவு நெறியைப் போற்றியதால், சேரிக்குத் தள்ளப்பட்டனர். சாதிய அமைப்பை ஆதரித்தவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டு, இவ்வமைப்பை எதிர்க்கும் சேரி மக்களைத் தாக்கும் ஏவலாட்களாக, அதே நேரத்தில் உரிமை அற்றவர்களாக இன்றளவும் வைக்கப்பட்டுள்ளனர். இந்து தர்மத்தைப் போற்றியவர்கள் ‘தர்மகர்த்தா’க்களாக ஆக்கப்பட்டனரே தவிர, அவர்களுக்குக் கோயில் கருவறையில் நுழையும் உரிமையை அவர்கள் சூத்திரர்கள் என்ற ஒரே காரணத் திற்காக இன்றுவரை பார்ப்பனியம் மறுத்து வருகிறது. சூத்திரர்கள் எவ்வளவுதான் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக இருந்தாலும், அவர்கள் ‘சற்சூத்திரர்’களாக ஆகலாமே தவிர, ஒரு போதும் பிராமணர்களாக ஆக முடியாது என்பதுதான் இந்து தர்மம். இரண்டாயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் சேரிக்குள் தள்ளப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், சமத்துவத்தை வலியுறுத்தி, ஊரையும் சேரியையும் இணைக்கவே போராடுகின்றனர்.இவை இரண்டையும் இணைத்துக் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதல்ல தலித் மக்களின் நோக்கம். மாறாக, சாதிகளற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை தலித் மக்கள் தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வேளை இந்த அமைப்பின் பெயர் தடையாக இருக்குமென்றால், இந்த அமைப்பின் பெயரையே மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தியதும்; தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்க தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பெரியார் அறிவித்ததும் சாதியயாழிந்த சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான உயரிய நோக்கத்தைக் கொண்டதாகும். உழைக்கும் மக்களைப் பார்ப்பனியம் பிளவுபடுத்தும்; அம்பேத்கரியமும் பெரியாரியமும் இம்மக்களை ஒன்றிணைக்கும். தலித் மக்களின் லட்சிய நோக்கத்தை ராமதாஸ் போன்ற சமூகக் குற்றவாளிகளால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், அவர்களின் சாதி வெறிக் கூட்டணியும் எந்த அளவுக்கு சாதிப்பித்து தலைக்கேறி ஆடினாலும், சமத்துவத்தின் குறியீடாகிய சாதி மறுப்புக் காதல் திருமணங்களை தலித் மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் இருப்பார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களில் எந்தக் குறைபாட்டையும் காண காஷ்மீர் முதல் குமரி வரை திரண்டிருக்கும் தலித் மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். அதில் இருக்கும் ஒரே குறைபாடு, அது சாதி இந்து அரசு நிர்வாகத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத் தவிர வேறு அல்ல. அதைத் திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை. ராமதாஸ் கூட்டாளிகளின் சவடால் பேச்சுக்களால் அதில் எந்தத் திருத்தத்தையும் செய்ய முடியாது. எனவே, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ள தலித் மக்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை அலட்சியப்படுத்தி, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மருத்துவர் ராமதாசின் சாதிவெறி போக்குக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால், அம்பேத்கர் இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு; தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும் சாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் திருமணங்களையும் நூற்றுக்கணக்கில் மாநாடுகள் போல அறிவித்து, தொடர்ச்சியாக நடத்துவதையே முக்கிய செயல்திட்டமாக விரைந்து அறிவித்திட வேண்டும்.0.000000 0.000000
Posted in கீற்று.
Leave a Comment »
மரக்காணம் அவலத்திலிருந்து மீண்டு வாருங்கள்! May 27, 2013 — தொகுப்புகள் ...i
7 Votes
சென்ற சனவரி 25ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் தமிழின ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியன. ‘கோடி வன்னியர் கூடும் குடும்ப விழா’வுக்காக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்த ஊர்திகளில்ஒன்று
விபத்துக்குள்ளானதும், பெரும்பாலும் தலித்துகளாகிய உள்ளூர் மக்களுக்கும் வண்டிகளில் வந்த வன்னியர்களுக்கும் மோதல் வெடித்ததும், வன்னியர்கள் சிலர் அருகிலிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி உடைமைகளைச் சூறையாடியதும், காவல் துறையினர் வானோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் சாலை மறியல் செய்த கூட்டத்தைக் கலைத்ததும், விபத்தினாலோ எதிர்த்தரப்பினரின் வன்செயலாலோ வன்னிய இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும்… இந்த நிகழ்வுகள் நடந்த விதம், நடந்த வரிசை பற்றியெல்லாம் நம்மால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை எந்த அளவுக்குத் தற்செயலானவை, எந்த அளவுக்குத் திட்டமிட்டவை என்று கண்டறிவதற்கு விரிவான, புறஞ்சார்ந்த, நடுநிலை தவறாத புலனாய்வும் விசாரணையும் தேவை. தற்செயலாக என்றாலும் சரி, திட்டமிட்ட முறையில் என்றாலும் சரி, நடந்த அவலங்களுக்கு அறப்பொறுப்பு ஏற்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களும்தான். முதலாவதாக, மாமல்லபுரம் விழாவை நடத்தியது வன்னியர் சங்கமா? பாமக-வா? இரண்டும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்றால் பாமக-வில் இடம்பெற்று, அதன் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர்கள் இரும்பொறை குணசேகரன், வள்ளிநாயகம், பழனிபாபா, குணங்குடி அனீபா, ஜான் பாண்டியன், முருகவேல்ராஜன், பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களுக்கெல்லாம் நீங்கள் தரும் இடம் என்ன? இப்போதும் பாமக பொதுச் செயலாளராக அறியப்படும் தோழர் வடிவேல் இராவணனை ஒப்புக்குத்தான் முன்னிறுத்துகின்றீர்களா? அவர் தன் சமுதாய மக்களுக்காகத் தனியமைப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? பாமக-வின் இலட்சிய வழிகாட்டிகளாக கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்துவீர்களே, அவர்களையும் வன்னியர் சங்கத்தில் சேர்த்து விட்டீர்களா? சாதி அரசியலும் சனநாயக அரசியலும் ஒத்துப் போக மாட்டா என்பதை விளங்க வைப்பதற்காகவே இந்த வினாக்கள். நமக்குத் தெரிந்த வரை வன்னியர் சங்கத்திலிருந்துதான் மருத்துவர் இராமதாசின் பொதுவாழ்வுப் பயணம் தொடங்கியது. வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் சமூகநீதியின் பாற்பட்ட ஒரு நியாயம் இருந்த படியால் நாமும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தோம். மருத்துவர் இராமதாசின் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்ச் சார்பும், தேர்தல் புறக்கணிப்பும், தலித்துகளோடு ஒன்றுபடும் ஆர்வப் பேச்சும் கடந்த கால வன்னிய சாதித் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின. திரு இளையபெருமாளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட தீண்டாமை-இழிவுநீக்க முயற்சிகளும், பிற்காலத்தில் குடிதாங்கிக் கிராமத்தில் தன் சாதியினரின் எதிர்ப்பை மீறிச் செயல்புரிந்து ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று தோழர் திருமாவளவனிடமே பட்டம் பெற்றதும் அவரது மதிப்பை உயர்த்தின. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கித் தேர்தல் அரசியலுக்குச் சென்ற பிறகும் தமிழீழ விடுதலை, தமிழகத் தன்னுரிமை, ஒரு-மொழிக் கொள்கை, மண்டல் பரிந்துரைச் செயலாக்கம் ஆகிய நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசிய, சமூகநீதி ஆற்றல்கள் உங்களோடு தோழமை கொண்டு நின்றோம். இப்போதும் அதுதான் சரியென்று நம்புகிறோம். மண் பயனுற மக்கள் தொலைக்காட்சி நிறுவியதை மருத்துவரின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாக இப்போதும் மதிக்கிறோம். பாமக-வும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அணிசேர்ந்த போது வரவேற்றோம், துணைநின்றோம், தோள் கொடுத்தோம். தேர்தல் வழிப் பதவி அரசியலில் முக்குளிக்க முக்குளிக்க பாமக-வின் முற்போக்குக் கொள்கைகள் கரைந்து போய் விட்டன. யாரும் கொள்கை பார்ப்பதில்லை, நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? என்பது மருத்துவரய்யாவின் மந்திரக் கேள்வி ஆயிற்று. ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாத அரசியலால் பாமக-வின் பெயர் கெட்டது. இது நம்பத்தகாத கட்சி என்று மாற்றுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கட்சி சாராத பொதுமக்களும் கருதலாயினர். சென்ற 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக அடைந்த படுதோல்வி மருத்துவரை விரக்திப் படுகுழியில் தள்ளியிருக்க வேண்டும். இதிலிருந்து எழுந்து வர கொள்கை அரசியலைத் துணைக் கொள்வதற்குப் பதிலாக அப்பட்டமான சாதி அரசியலைக் கையிலெடுத்து விட்டார். எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் காதல் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு என்ற பிற்போக்கு நிலைப்பாடுகளிடம் மருத்துவர் தஞ்சம் புகுந்து விட்டார். சென்ற 2012 சித்திரை முழு நிலவில் காடுவெட்டி குருவின் பேச்சு இதற்கு முன்னோட்டம் ஆயிற்று. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணம், இதையொட்டி ஒரு ‘கௌரவ’த் தற்கொலை என்பவற்றைச் சாக்கிட்டு மூன்று சேரிகளை வன்னிய சாதி வெறியர்கள் தாக்கிச் சூறையாடியதை பாமக ஒப்புக்குக் கூடக் கண்டிக்கவில்லை. மாறாக மருத்துவர் அந்த வன்கொடுமையை நியாயப்படுத்துவதற்காக காதல், கலப்பு மணம், நாடகத் திருமணம் என்றெல்லாம் தத்துவ விசாரம் செய்து, ‘புள்ளிவிவர’ங்களை அள்ளி விட்டதோடு, தலித்துகளை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. சாதிப் பொருத்தம், சாதகப் பொருத்தம், பணப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களே உண்மையில் நாடகத் திருமணங்கள் என்ற உண்மையை மறைத்து, செம்புலப் பெயல்நீர் போலும் அன்புடை நெஞ்சம் தான் கலந்திடும் இயல்பான காதலை நாடகம் என்று மருத்துவர் இராமதாசு வர்ணித்தது அவரது பிற்போக்கு உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்து விட்டது. ஐயா, உங்கள் முற்போக்கு நாடகம் முடிந்து திரை விழுந்து விட்டது. இந்த சாதிவெறி அரசியலில் பிற சாதிவெறி ஒட்டுக் குழுக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதும், தலித் அல்லாதார் கூட்டணியை உருவாக்க முயல்வதும் சமூக நீதிக்குக் குழிபறிக்கும் வேலை என்பதில் ஐயமில்லை. பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று ஈரோட்டுப் பெரியார் சொன்னதை ‘தாடி வைக்காத திண்டிவனத்துப் பெரியாரு’க்கு யார் புரிய வைப்பது? பாமக-வின் இந்த சாதிய அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் மரக்காணம் கொடுநிகழ்வுகள். வன்னியர் விழாவுக்கு வந்தவர்களிடம் இராமதாஸ்-குரு வகையறா ஊட்டி வளர்த்த சாதி வெறிதான் அவர்களை மரக்காணம் தெற்குக் காலனிக்குள் நுழைந்து தீவைப்புத் தாக்குதலில் ஈடுபடச் செய்துள்ளது. தலித்துகள் ஒருவேளை மறியலில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது காவல்துறை தீர்க்க வேண்டிய சிக்கலே தவிர சாலையை விட்டு விலகிப் போய் ஊருக்குள் புகுந்து வன்செயல் புரிவதற்கு நியாயமில்லை. இரண்டு வன்னிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு விபத்தா கொலையா, கொலை என்றால் செய்தது யார் என்று காவல்துறை புலனாய்வு செய்துவருகிறது. தமிழகக் காவல்துறையை நம்புவதற்கில்லை என்றால் பாமக கோருவது போல் சிபிஐ புலனாய்வுக்கு வகை செய்யலாம். மரக்காணம் வன்செயல்கள் அனைத்துக்கும் சேர்த்து எல்லாத் தரப்பினரும் ஏற்கும் படியான நீதி விசாரணைக்கும் கூட ஆணையிடலாம். சாதிப் பகைமை மறைந்து நல்லிணக்கம் மீள எவ்விலையும் தரலாம். மரக்காணம் அவலத்துக்கு அறப் பொறுப்பு பாமக-வையே சாரும் என்பதில் ஐயமில்லை. அக்கட்சியும் அதன் நிறுவுநரும் அக்கறையோடு தமது அணுகுமுறையை மீளாய்வு செய்து, சாதிய அரசியலிலிருந்தும், அதற்கு வழிகோலிய சந்தர்ப்பவாதப் பதவி அரசியலிலிருந்தும் மீண்டெழுந்து தமிழின நலனுக்கும் சமூகநீதிக்குமான போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம். “நுனிக் கொம்பேறினார் அ(.)திறந்தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற எச்சரிக்கையை அரசியல் வகையில் பாமக சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறோம். மரக்காணம் நிகழ்வுகளில் மருத்துவர் இராமதாசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதை ஏற்க இயலாது. அக்கட்சியின் உள்ளூர் ஆதரவாளர்கள்சிலர்
ஆத்திரமூட்டலுக்குப் பலியாகி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சித் தலைமை, குறிப்பாகத் தோழர் தொல். திருமாவளவன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதும், ஏட்டிக்குப் போட்டியாக சாதிவெறியைத் தூண்டாமல் சமூக நல்லிணக்கத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியதும் போற்றுதலுக்குரியது. தம்மிடமிருந்து அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ஒருவர் முன்பு தர்மபுரியிலும் இப்போது மரக்காணத்திலும் தலித் எதிர்ப்பை அரசியலாகக் கைக்கொண்டிருப்பது குறித்துத் திருமாவே வேதனைப்படுவார். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலைக் கண்டிப்பது வேறு. வன்னியர்கள் அனைவரையும் சாதிவெறியர்களாகவும் வன்கொடுமைக்காரர்களாகவும் படம்பிடிப்பது வேறு. வன்னியர்களும் உழைக்கும் மக்களே. அவர்களும் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை மறந்து விடலாகாது. தலித் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் அனைவரையும் ஆதிக்க சாதியினர் என்று முத்திரையிடுவது சமூக அறிவியலுக்கும், தமிழ்த் தேசியக் கருத்தியல் மற்றும் நடைமுறைக்கும் புறம்பானது. சாதியடுக்கில் ஆதிக்க சாதி என்பது ஒரு சார்புநிலைக் கருத்தாக்கமாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களைக் கொடுமுடியாகவும் தலித்துகளை அடிக்கல்லாக்கவும் கொண்ட வர்ண-சாதி இந்துச் சமூக அமைப்பில் இடைச்சாதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புநிலையில் ஆதிக்கம், அடிமை ஆகிய இருவகைக்கும் பொருந்தக் காணலாம். ஏன்? பார்ப்பனர்களுக்குள்ளேயும், தலித்துகளுக்குள்ளேயும் கூட, இந்தப் பிரிவுகள் இருப்பது மெய். தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் என்று ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ்த் தேசியம் வெல்வது முயற்கொம்பே. தீண்டாமைக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கும் போதே தமிழின ஒற்றுமைக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்காகவும் போராடுவது புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தட்டிக்கழிக்கக் கூடாத ஒரு பணி. தோழர் திருமா பதவி அரசியலுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்தும் கூட, இந்த நெருக்கடியில் அவருடைய தேர்தல் கூட்டாளிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விடவும் வாக்கு வங்கி சார்ந்த சாதிக் கணக்கு பார்த்தே வாய் திறந்தார்கள் என்பதை அவர் கவனித்திருப்பார் என நம்புகிறோம். வேடிக்கை என்னவென்றால், மருத்துவர், திருமா இருவருமே போராட்ட அரசியலில் இருந்துதான் பதவி அரசியலுக்குச் சென்றார்கள். இருவருமே தேர்தல் புறக்கணிப்பில் தீவிரமாக இருந்து விட்டுத்தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலில் குதித்தார்கள். மரக்காணம் அவலங்களிலிருந்து மீண்டு வருவதென்றால் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலை விட்டு உரிமைப் போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றுபொருள்.
மரக்காணம் தொடர்பான ஜெ. அரசின் அணுகுமுறை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், எதிர்காலத்தில் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குக் காரணங்களை உருவாக்குவதாகவும்உள்ளது.
கோரிக்கை எதுவானாலும் சரி, ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மருத்துவர் இராமதாசைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்ததும், அவர் பிணையில் வெளியே வர முடியாத படி புதுப் புது (அல்லது பழைய பழைய) வழக்குகளில் மீண்டும் மீண்டும் தளைப்படுத்துவதும் ஜெ. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கே சான்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய அதே போழ்தில் மருத்துவர் இராமதாசு கூடங்குளம் வழக்கில் தளைப்படுத்தப்பட்டது ஜெ. அரசின் வக்கிரத்தையே காட்டுகிறது. மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து வழக்குகளையும் விலக்கிக் கொள்வது இயல்புநிலை மீளத் துணைசெய்யும். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலை எதிர்க்கும் போதே அரசின் தயவில் அவரோடு கணக்குத் தீர்க்கத் தேவையில்லை. சாதிய அரசியலை சமூக நீதி அரசியலால் எதிர்கொண்டு முறியடிக்கும் தெளிவும் துணிவும் நமக்குத் தேவை. எவ்வித நிபந்தனையும் இன்றி மருத்துவர் இராமதாசை உடனே விடுதலை செய்யக் கோருகிறோம். (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் மருத்துவர் இராமதாசு பிணை விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.) பொதுவாக மற்றவர்கள் மீதான வழக்குகளையும் விலக்கிக் கொண்டு மரக்காணம் வன்முறை, மகாபலிபுரம் கூட்டம், மற்றும் பின்னிகழ்வுகள் தொடர்பாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோருகிறோம். சட்டப் பேரவை உறுப்பினர் குருவுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச்சட்டம்
ஏவப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். காடுவெட்டி குருவின் தடாலடி மேடைப் பேச்சால் ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என்றால் அந்தத் தேசம் ஒழிந்து போவதே நல்லது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் எவருக்கு எதிராக ஏவப்பட்டாலும் எதிர்க்கும் கொள்கைத் தெளிவும் திடமும் தமிழக சனநாயக ஆற்றல்களுக்குத்தேவை.
இறுதியாக, மாணவர் போராட்டத்தால் தலைநிமிர்ந்த தமிழன்னை மரக்காணத்தால் தலைகுனிந்து நிற்கிறாள். அவளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு. – தியாகு, பொதுச் செயலாளர், த.தே.வி.இ.0.000000 0.000000
Posted in கீற்று.
Leave a Comment »
பா.ம.க.வில் உறுப்பினராகும் தகுதிகள்… May 27, 2013 — தொகுப்புகள் ...i
7 Votes
மரம் வெட்டத் தெரியுமா? மரத்தை வெட்டி சாலை மறியல் பண்ணத் தெரியுமா? மது அருந்தத் தெரியுமா? மது அருந்திக் கொண்டே மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்யத் தெரியுமா? கொடி பிடித்து கோசம் போடத் தெரியுமா? கோசம் போட்டுக் கொண்டே கொலை வெறியைத் தூண்டி விடத் தெரியுமா? சாதிப் பெருமை பேசத் தெரியுமா? சாதி பெருமை பேசிப் பேசியே சேரிக் குடிசைக்குள் தீ வைக்கத் தெரியுமா? சாதி விட்டு சாதி கூடாதெனச் சொல்லத் தெரியுமா? கூடாதென சொல்லிக் கொண்டே சேரிப்பெண்ணை வீடுபுகுந்து நாசம் செய்யத் தெரியுமா? காதலிக்கத் தெரியுமா? காதலித்துக் கொண்டே காதலித்த பெண்ணின் மீது திராவகம் வீசத் தெரியுமா? சமத்துவம் பற்றி பேசத் தெரியுமா? சமத்துவம் பற்றி பேசிக் கொண்டே சாதி சங்கங்களைக்கூட்டி
சாதி வெறியைத் தூண்ட தெரியுமா? ஆர்ப்பாட்டம் செய்யத் தெரியுமா? ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அரசாங்க சொத்தை சூறையாடத் தெரியுமா? அடாவடித்தனம் செய்யத் தெரியுமா? அடாவடித்தனம் செய்துகொண்டே
அரசு அதிகாரிகளின் மண்டையை உடைக்கத் தெரியுமா? ஓநாய்கள் போல ரத்தம் குடிக்கத் தெரியுமா? ஒன்றுமில்லா காரியத்திற்கு ஒப்பாரி வைக்கத் தெரியுமா? கள்ளச் சாராயம் காய்ச்சத் தெரியுமா? கையெறிகுண்டு வீசத் தெரியுமா? தமிழ்த் தேசியம் பேசத் தெரியுமா? தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே
சேரித் தமிழனை படுகொலை செய்யத் தெரியுமா? இவையெல்லாம் அடிப்படைத் தகுதிகள் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினராவதற்கு… – வழக்கறிஞர் நீதிமலர்0.000000 0.000000
Posted in கீற்று.
1 Comment »
வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? May 27, 2013 — தொகுப்புகள் ...i
7 Votes
வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள். ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை. ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது. சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே, வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள். தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள், வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பதுஎது?
இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான்வீரமா?
வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும். தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.0.000000 0.000000
Posted in வே மதிமாறன்.
Leave a Comment »
மணல் கூழாங்கற்களின் குழந்தை May 9, 2013 — தொகுப்புகள் ...i
7 Votes
‘மணல்
கூழாங்கற்களின் குழந்தை–! நீங்கள் மண்ணை வெட்டுவது எங்கள் மழலையை வெட்டுவதற்குச் சமம்-! அடுத்தவனுக்குப் பள்ளம் தோண்டியே அடையாளப்பட்டவனே…எங்கள்
மண்ணையும் தோண்டிப் பூமியை புதைத்துவிடாதே! சோறு போடும் நிலத்தைக் கூறு போடும் நீ விந்துக்குப் பிறந்தவனா? சிறுநீருக்குப் பிறந்தவனா? மணல் தரையை நீங்கள் மாமிசமாய் அறுத்துத் தின்றால்எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்எங்கே
பாண்டி ஆடுவது? எங்கள் மழலைகள் எங்கே மணல் வீடு கட்டுவது? கோவண மனிதர்கள்எங்கே
கொல்லைக்குப் போவது? நாங்கள் ஒத்தையடிப்பாதையில்எப்படி
ஊர் போய்ச் சேருவது? வேரறுந்த மரத்தின் கீழ்எப்படி
வெயில் இளைப்பாறுவது? அகதியாய்ப் போன பறவைகளை யார் அழைப்பது?உங்கள்
சிகரெட் புகையில் மழை வரும் என்பதற்காகஎங்கள்
தாகத்தைத் தள்ளிப்போட முடியாது! திருட்டுத்தொழிலை விட்டுவிடு திருடிய மண்ணைக் கொட்டி விடு! இனிமேல் திருட நினைத்தால்… இவனைஇரண்டு துண்டாய் வெட்டிவிடு!’கபிலன்
0.000000 0.000000
Posted in கபிலன்.
Tags: கபிலன்.
Leave a Comment »
Older posts
Proudly powered by WordPress*
*
BLOGROLL
* 'சு'னா 'பா'னா"* Ambedkar.in
* அசுரன்* அலசல்
* இதுதான் அமெரிக்கா * இந்து மதம் எங்கே போகிறது? * இனியொரு.. * இவர் தான் லெனின் * ஈரோட்டுக்கண்ணாடி * எண்ணங்களின் குரல்வடிவம் * ஏகலைவன* கலகம்
* கார்டூன் கண்ணன்* காலம்
* கீற்று * குழலி பக்கங்கள் * கூட்டாஞ்சோறு * கை.அறிவழகன் * கைமண் அளவு * கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…! * சங்கமித்திரன் * சசியின் டைரி * சமூக போராளியின் வாழ்க்கை போராட்டங்கள் * சம்பூகன் * சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒருப்ளாக்
* சிவப்பு அறிவால் வெல்… * சுகுணா திவாகர் * செங்கதிர் * செம்மலர் * தமிழச்சி * தமிழ் அரங்கம் * தமிழ் ஓவியா * தமிழ்த் தேசிய விவாதக்களம் * தீஸ்மாஸ் டி செல்வா * தேவேந்திரர் குரல் * தோழர் பெரியார் * நடைவண்டி * நற்றமிழன் * பகுத்தறிவு * பறையோசை * பாமரன் * பாரம்பரியம் * புதிய கலாச்சாரக் கவிதைகள் * புதிய ஜனநாயக மக்கள் முன்னணி * புத்தகப் பிரியன் * புரட்சிகர இதழ்கள் * புரட்சிகர பாடல்கள் * பெரியார் குரல் * பெரியார் தளம் * பெரியார் பிஞ்சு பழகுமுகாம்
* பெரியார் முழக்கம் * பேசுகிறேன் * மக்கள் சட்டம் * மருதன் * மானுட விடுதலை… * மீனகம் – உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் * மொழியும் மொழிசார்ந்த நிலமும் * யுவகிருஷ்ணா * ராவணன் * ருத்ரனின் பார்வை * லிவிங் ஸ்மைல் வித்யா * வன்னி அரசு* வினவு!
* வெயிலான் * வே.மதிமாறன்* marxist
* superlinks
* Tamizachiyin-Periyar*
ARCHIVES
* July 2013
* May 2013
* February 2013
* January 2013
* August 2011
* July 2011
* June 2011
* May 2011
* April 2011
* March 2011
* February 2011
* January 2011
* December 2010
* November 2010
* October 2010
* September 2010
* August 2010
* May 2010
* April 2010
* March 2010
* February 2010
* January 2010
* December 2009
* November 2009
* October 2009
* September 2009
* November 2008
*
MISC
* Register
* Log in
* WordPress.org
*
தொகுப்புகள் …Post to
Cancel
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: CookiePolicy
* Follow
*
* தொகுப்புகள் ...* Customize
* Follow
* Sign up
* Log in
* Report this content * Manage subscriptions* Collapse this bar
Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0